For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒசாமா தப்பிவிடாமல் தடுக்க கப்பல்களில் சோதனை

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

கடல் வழியாக பின்லேடன் தப்பிவிடாமல் இருக்க பாகிஸ்தானில் இருந்து செல்லும் அனைத்து கப்பல்களும் தீவிரசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து பாகிஸ்தானில் வெளியாகும் "தி நேஷன்" என்ற பத்திரிக்கை இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து தலிபான்கள் விரட்டப்பட்டுள்ள நிலையில் சர்வதேசதீவிரவாதி பின்லேடனைப் பிடிக்க அமெரிக்கா தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அவன் கடல்வழியாகத் தப்பிவிடாமல் இருக்க பாகிஸ்தானில் இருந்து கிளம்பும் அனைத்துக் கப்பல்களும் தீவிரபரிசோதனைக்குப் பிறகே அனுப்பப்படுகின்றன.

ஆனால், இதை அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஆசிஸ் அகமது கான் மறுத்தார்.பாகிஸ்தானில் இருந்து கிளம்பும் அனைத்து கப்பல்களும் அமெரிக்கப்ப படையினரால் சோதனைசெய்யப்படுகின்றன என்ற செய்தியில் உண்மையில்லை. ஆனால் சர்வதேச கடல் எல்லையில் எது நடந்தாலும்அதைப்பற்றி பாகிஸ்தானுக்கு அக்கறை இல்லை.

மேலும் பின்லேடனுக்கு உதவியதாக 3 ஓய்வுபெற்ற அணு விஞ்ஞானிகளை அமெரிக்க உளவுப் பிரிவினரிடம்ஒப்படைத்ததாகக் கூறப்படுவதிலும் உண்மை இல்லை என்றார்.

ஆனால், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் அமெரிக்க உளவுப்பிரிவினரிடம் 3 பாகிஸ்தான் அணு விஞ்ஞானிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள் என்றும், அவர்கள்பின்லேடனுக்கு உதவியது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் தெரிவிக்கின்றன.

உண்மைகளை தொடர்ந்து மறுத்து வருகிறது பாகிஸ்தான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X