டெஸ்ட் கிரிக்கெட்: டெண்டுல்கர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

போர்ட் எலிசபெத்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணியின்நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் உள்பட ஆறு பேருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்குமிடையே தற்போது நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது டெண்டுல்கர்பந்தைச் சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனாலும் போட்டி நடுவர் மைக் டென்னஸ், "டெண்டுல்கர் பந்தைச் சேதப்படுத்தவில்லை. தன் கை விரலால்பந்தைச் சுத்தப்படுத்தியுள்ளார். இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் ஆலோசனை பெற்ற பிறகேஇதுகுறித்து முடிவு செய்வேன்" என்று கூறிவிட்டார்.

டெண்டுல்கரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அடுத்த டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியாது.மேலும் அவருடைய சம்பளத்திலிருந்து 75 சதவீதம் அபராதத் தொகையாக வசூலிக்கப்படும்.

இதற்கிடையே போட்டி விதிகளை மீறி தென் ஆப்பிரிக்க மட்டை வீரர்களை வெளியேற்றுவதற்காக, நடுவரிடம்அடிக்கடி அப்பீல் செய்த குற்றத்திற்காக இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி, வீரேந்திர ஷேவக், ஹர்பஜன்சிங், தீப் தாஸ் குப்தா, சிவ் சுந்தர் தாஸ் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது. மேலும் இவர்களுடைய சம்பளத்திலிருந்தும் 75சதவீதம் அபராதத் தொகையாக வசூலிக்கப்படும்.

இத்தண்டனைகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) முறைப்படி தன்னுடையமுடிவை அறிவிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+