"மக்கள் எண்ணப்படி பஸ்கள் தனியார் மயமாக வேண்டும்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பஸ் போக்குவரத்தை முற்றிலும் தனியார் மயமாக்க வேண்டும் என்று அரசுக்கு சமூக நீதிக் கட்சித்தலைவர் ஜெகவீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்கள் மனதில் பஸ் போக்குவரத்தை தனியாரிடம் விட வேண்டும் என்ற எண்ணம் வலுத்து விட்டது. இதைதமிழக அரசு நிச்சயம் பரிசீலிக்க வேண்டும்.
அரசு பஸ் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை மக்கள் ஆதரிக்கவில்லை என்பதையே இதுகாட்டுகிறது. பஸ் ஸ்டிரைக்கை தனியார் பஸ்கள் மூலம் அரசு சமாளித்தது பாராட்டுக்குரியது.
பஸ் தொழிலாளர்கள் அரசியல் சாயத்துடன் வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள பொது வேலைநிறுத்தத்தில்பொதுமக்கள் பங்கு பெறக் கூடாது என்று சமூக நீதிக் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று ஜெகவீரபாண்டியன்அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications