திருச்சி விமான நிலையத்தில் எக்ஸ்-ரே ஸ்கேனர் கருவி
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களைச் சோதனையிடும் எக்ஸ்-ரே ஸ்கேனர் கருவிஇன்று (வியாழக்கிழமை) இயக்கி வைக்கப்பட்டது.
இந்தக் கருவியை இயக்கி வைத்துப் பேசிய விமானப் போக்குவரத்துத் துறைப் பொது மேலாளர் கே. சிவகுமார்கூறுகையில்,
எக்ஸ்-ரே ஸ்கேனர் கருவியின் மூலம் விமானப் பயணிகள் கொண்டுவரும் லக்கேஜ்களை விரைவாக பரிசோதனைசெய்ய முடியும்.
தற்போது தமிழ்நாடு போலீசின் பொறுப்பில்தான் திருச்சி விமான நிலையப் பாதுகாப்பு உள்ளது. இன்னும் இரண்டுமாதங்களில் மத்திய தொழிற்துறைப் பாதுகாப்புப் படையிடம் இந்த விமான நிலையத்தின் பாதுகாப்புப் பணிகள்ஒப்படைக்கப்படும்.
இரவு நேரங்களிலும் விமானப் போக்குவரத்து இருக்கும் திருச்சி போன்ற விமான நிலையங்கள் நவீனப்படுத்தப்படும்.
உள்நாட்டுப் போக்குவரத்திற்காக இயக்கப்படும் விமானங்கள் தவிர, கொழும்பு மற்றும் ஷார்ஜாவுக்கும்திருச்சியிலிருந்து நேரடி விமானங்கள் இயக்கப்படும் என்றார் சிவகுமார்.