சென்னையில் "தம்" அடித்த 900 பேர் மீது வழக்கு
சென்னை:
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் பொது இடங்களில் புகை பிடித்த காரணத்திற்காக 900 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் இன்று (வியாழக்கிழமை)தெரிவித்தார்.
பொது இடங்களில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றம் என்று கடந்த சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றம்அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக இரு வாரங்களுக்கு முன் கோயம்புத்தூரில் பொது இடங்களில் புகை பிடித்துக் கொண்டிருந்த 1,000பேர் கைது செய்யப்பட்டனர். அபராதம் கட்டிய பிறகு அவர்கள் விடுதலையாயினர்.
அதற்கு மறுநாளே சென்னையிலும் போலீசார் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை வளைத்துப் பிடிக்கஆரம்பித்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் பொது இடங்களில் புகை பிடித்த காரணத்திற்காக 900க்கும் அதிமான வழக்குகள்சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று முத்துக்கருப்பன் கூறினார்.












Click it and Unblock the Notifications