மருத்துவக் கல்லூரி மாணவர் மாடியிலிருந்து விழுந்து பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தவர்கள் சயீத் அலி கான் மற்றும் கிருஷ்ணா சூரி. இருவரும் கடந்த19ம் தேதி கல்லூரி விடுதியின் மூன்றாவது மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சூரி தவறி கீழே விழுந்தார். அவரை கீழே விழாமல் தடுக்க முயன்றபோது சயீத்தும்தடுமாறி கீழே விழுந்தார்.
பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிய இருவரையும் மற்ற மாணவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு போய்சேர்த்தனர். இதில் சூரி இறந்தார்.
சயீத் உயிருக்குப் போராடி வருகிறார்.












Click it and Unblock the Notifications