மத்திய அரசுக்கு ஆதரவு தரத் தயார்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
பா.ஜ.க. கூட்டணியில் இணைவதற்கான முயற்சிகளில் ஜெயலலிதா தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
முதலில் மத்திய அரசின் பொடோ சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குபிரச்சனைகள் அடிப்படையிலான ஆதரவு தரப் போவதாக இன்று அறிவித்தார். மேலும் காங்கிரசுடனானஉறவையும் முறித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சூசகமாக அறிவித்தார்.
கருணாநிதி கைது விவகாரத்தில் பா.ஜ.கவுக்கும் திமுகவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் அதிகமாகிக் கொண்டேசெல்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கூட்டங்கள் சிலவற்றை கருணாநிதி புறக்கணித்தார்.
பா.ஜ.க. தேசியத் தலைவரான ஜனா. கிருஷ்ணமூர்த்தி சென்னையில் நடத்திய தனது மகனின் திருமணத்துக்குக் கூடகருணாநிதியை அழைக்கவில்லை. அந்தத் திருமணத்துக்கு வந்த பிரதமர் வாஜ்பாயை கருணாநிதி மரியாதைநிமித்தமாகக் கூட சந்திக்கவில்லை.
இந்த கருத்து வேறுபாடுகளை தனக்கு சாதமாக மாற்றும் முயற்சிகளில் ஜெயலலிதா இறங்கியுள்ளார்.
பொடோ சட்டத்தை கருணாநிதி எதிர்த்து வரும் நிலையில் அந்தச் சட்டத்தை ஆதரிப்பதாக ஜெயலலிதாஅறிவித்தார்.
இன்று நிருபர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,
நாடாளுமன்றத்தில் பிரச்சனைகள் அடிப்படையில் தான் இனி எங்கள் ஆதரவு இருக்கும். அதிமுக ஒருசுயேச்சையான கட்சி (காங்கிரஸ் கூட்டணியில் இல்லை). நாங்கள் எங்கள் முடிவுகளை தனிப்பட்ட முறையில்எடுப்போம்.
திமுக-பா.ஜ.க. உறவில் விரிசல் ஏற்படுத்தும் முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவதாக பத்திரிக்கைகள் கூறுவது குறுத்துகருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. இப்போதைக்கு நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை.
பாண்டிச்சேரியில் அதிமுகவை காங்கிரஸ் கேவலப்படுத்தி வருகிறது. எங்களை அக் கட்சி சரியாக நடத்தவில்லை.இதனால் தான் ஆதரவை வாபஸ் பெற்றோம். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.












Click it and Unblock the Notifications