அதிமுகவிலிருந்து பாண்டிச்சேரி சபாநாயர் நீக்கம்: ஜெ. அதிரடி
சென்னை:
பாண்டிச்சேரி சபாநாயர் டி.ராமச்சந்திரனை அதிமுகவிலிருந்து நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் அதிமுக உறுப்பினரான டி.ராமச்சந்திரன் தான் சபாநாயகராகஉள்ளார்.
அவர் காங்கிரசில் சேர முயற்சித்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில் அவரை கட்சியைவிட்டே தூக்கியுள்ளார்ஜெயலலிதா. இவர் 1989ம் ஆண்டு திமுக ஆட்சியைப் பிடித்தபோது பாண்டிச்சேரி முதல்வராக இருந்தவர். பின்னர்அதிமுகவுக்குத் தாவினார்.
இப்போது அவர் கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சிக்கு அவமரியாதையைத் தேடி தரும் வகையில் செயல்பட்டு வந்ததால் ராமச்சந்தின் நீக்கப்படுகிறது. இன்றுமுதல் அவர் வகித்து வந்த அனைத்துப் பதவிகளில் இருந்து நீக்கப்படுவதோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினர்பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications