மக்கள் தமிழ் தேசம் மாபெரும் கட்சியாகும்: கண்ணப்பன் ஜோக்
சென்னை:
மக்களின் ஆதரவு பெற்ற மக்கள் தமிழ் தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணையாது என்று அக்கட்சியின் தலைவர் எஸ்.கண்ணப்பன்திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலையொட்டி பிறந்த ஜாதிக் கட்சி மக்கள் தமிழ் தேசம். சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பல ஜாதிக் கட்சிகள்காணாமல் போய் விட்டன. உள்ளாட்சித் தேர்தலின்போது அவற்றில் சில போட்டியிட்டன. அதில் மக்கள் தமிழ் தேசம் ஒன்று.
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது மக்கள் தமிழ் தேசம். தேர்தலுக்குப் பிறகு அது காங்கிரஸ்கட்சியுடன் இணைந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதை கண்ணப்பன் மறுத்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலின்போது எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இதுகட்சியைத் தொடர்ந்து நடத்தும் வலிமையைத் தந்துள்ளது.
எதிர்காலத்தில் மிகப் பெரும் கட்சியாக வளருவோம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கட்சியை நடத்தவுள்ளோம். காங்கிரஸில் இணையும்பேச்சுக்கே இடமில்லை. தோழமையுடன் அவர்களுடன் எங்களது உறவு நீடிக்கும்.
கிராம அளவிலிருந்து கட்சியை வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.விரைவில் நான் உள்பட மாநில நிர்வாகிகள் மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்கத் தேவையானநடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றார் அவர்.