வீரப்பனிடமிருந்து இன்னொரு கேசட் வந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து இன்னொரு கேசட் வந்துள்ளது.
சமீபத்தில் வீரப்பனிடமிருந்து தனக்கு ஒரு கேசட் வந்ததாக நெற்றிக்கண் வாரஇதழ் ஆசிரியர் மணி கூறினார்.அதை முத்லவ்ர பன்னீர்செல்வத்திடம் சமர்பித்தார். அதில், தான் சரணடையத் தயாராக இருப்பதாகவும் உடனடியாகஅதிரடிப் படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் வீரப்பன் கூறியிருந்தான்.
ஆனால், இது வீரப்பனின் குரலா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் படையை விலக்க வேண்டும் என்றகோரிக்கையை தமிழக, கர்நாடக அரசுகள் நிராகரித்துவிட்டன. எபபோது வேண்டுமானாலும் வந்து வீரப்பன்சரணடையலாம் என்று கூறிவிட்டன.
இந் நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் துரைசாமி என்பவருக்கும் இதே போன்ற ஒரு கேசட்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் உள்ள விவரங்கள் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications