முறையான விசாக்களுடன் அமெரிக்கா வந்த கடத்தல்காரர்கள்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் விமானங்களை கடத்தித் தாக்குதல் நடத்திய கடத்தல்காரர்கள் 19 பேரும்முறையாக விசா வாங்கியே வந்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தாக்குதலில் ஈடுபட்ட 19 பேரில் 15 பேர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். 2 பேர் ஐக்கிய அரபுஎமிரேட்ஸ் நாட்டையும், ஒருவர் எகிப்தையும், மற்றொருவர் லெபனானையும் சேர்ந்தவர்கள்.
இவர்களில் 14 பேர் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில்தான் அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளனர்.மற்றவர்கள் கடந்த ஆண்டே அமெரிக்காவிற்கு வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் வியாபாரம், சுற்றுலா மற்றும் படிப்பு ஆகிய காரணங்களுக்காக அமெரிக்காவிற்குவருவதாகக் கூறியுள்ளனர்.
இவர்களில் சதாம் அல் சுகாமி என்பவன் கடந்த மே மாதம் வந்துள்ளான். அவனுடைய விசா சரியாக செப்டம்பர்11ம் தேதி முடிவுக்கு வந்துள்ளது. இவன் வியாபார ரீதியாக இங்கு வந்ததாகத் தெரிவித்துள்ளான்.
இதேபோல நவாஸ் அல்ஹாஸ்மி என்பவனது விசாவும் முடிவடைந்துள்ளது. ஹானி ஹஞ்சர் என்பவன் கடந்தஆண்ட டிசம்பர் மாதம் படிப்பதற்காக இங்கு வந்துள்ளான். ஆனால் அவன் கல்லூரிக்கே செல்லவில்லை.
இந்த 19 பேரும் இங்கு வந்ததிலிருந்து நாடு முழுவதும் சுற்றிக் கொண்டிருந்துள்ளனர். ஆனால் யாரும்அமெரிக்காவை விட்டு வெளியே செல்லவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது அரேபியா மற்றும் முஸ்லீம் நாடுகளில் இருந்துஅமெரிக்காவிற்கு வர விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு விசா வழங்கப்படுவதை வெளியுறவுத்துறை நிறுத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.