For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முறையான விசாக்களுடன் அமெரிக்கா வந்த கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் விமானங்களை கடத்தித் தாக்குதல் நடத்திய கடத்தல்காரர்கள் 19 பேரும்முறையாக விசா வாங்கியே வந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் 4 விமானங்களைக் கடத்தி நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஆகியநகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் பங்குபெற்ற அனைத்து தீவிரவாதிகளும் முறைப்படிவிசாக்களை வாங்கியே அமெரிக்கா வந்துள்ளனர் என்று அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தாக்குதலில் ஈடுபட்ட 19 பேரில் 15 பேர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். 2 பேர் ஐக்கிய அரபுஎமிரேட்ஸ் நாட்டையும், ஒருவர் எகிப்தையும், மற்றொருவர் லெபனானையும் சேர்ந்தவர்கள்.

இவர்களில் 14 பேர் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில்தான் அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளனர்.மற்றவர்கள் கடந்த ஆண்டே அமெரிக்காவிற்கு வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் வியாபாரம், சுற்றுலா மற்றும் படிப்பு ஆகிய காரணங்களுக்காக அமெரிக்காவிற்குவருவதாகக் கூறியுள்ளனர்.

இவர்களில் சதாம் அல் சுகாமி என்பவன் கடந்த மே மாதம் வந்துள்ளான். அவனுடைய விசா சரியாக செப்டம்பர்11ம் தேதி முடிவுக்கு வந்துள்ளது. இவன் வியாபார ரீதியாக இங்கு வந்ததாகத் தெரிவித்துள்ளான்.

இதேபோல நவாஸ் அல்ஹாஸ்மி என்பவனது விசாவும் முடிவடைந்துள்ளது. ஹானி ஹஞ்சர் என்பவன் கடந்தஆண்ட டிசம்பர் மாதம் படிப்பதற்காக இங்கு வந்துள்ளான். ஆனால் அவன் கல்லூரிக்கே செல்லவில்லை.

இந்த 19 பேரும் இங்கு வந்ததிலிருந்து நாடு முழுவதும் சுற்றிக் கொண்டிருந்துள்ளனர். ஆனால் யாரும்அமெரிக்காவை விட்டு வெளியே செல்லவில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது அரேபியா மற்றும் முஸ்லீம் நாடுகளில் இருந்துஅமெரிக்காவிற்கு வர விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு விசா வழங்கப்படுவதை வெளியுறவுத்துறை நிறுத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X