திருடனிடமே நகை திருடிய 8 போலீசார் சஸ்பெண்ட்
திருப்பூர்:
திருடனிடம் நகை திருடிய 8 போலீஸ்காரர்கள் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர்இன்ஸ்பெக்டர், இன்னொருவர் சப்-இன்ஸ்பெக்டர்.
6 மாதங்களுக்கு முன் திருப்பூர் வடக்குக் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் திருட்டு நடந்தது.விசாரணை நடத்திய போலீசார் திருடனைப் பிடித்தனர். அவனிடம் இருந்து 40 பவுன் நகைகளை போலீசார்கைப்பற்றினர்.
ஆனால், இதில் 15 பவுனை தனியாக தங்களுக்கு ஒதுக்கிக் கொண்டனர். அந்த 15 பவுன் நகையை இன்ஸ்பெக்டர்,சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 6 போலீசார் தங்கள் பதவிகளுக்கு ஏற்ப பிரித்துக் கொண்டனர்.
பின்னர் அந்தத் திருடனிடம் இருந்து 25 பவுன் மட்டுமே கைப்பற்றப்பட்டதாகக் கணக்குக் காட்டினர். தொடர்ந்துஅந்த திருடனுக்கு சிறை தண்டனையும் வாங்கித் தந்தனர்.
ஆனால், அந்தத் திருடன் ரகசியமாக உயர் அதிகாரிகளிடம் ஒரு மனு தாக்கல் செய்தான். அதில் இந்த போலீசார்தன்னிடம் நகை திருடிய விவரத்தைத் தெரிவித்திருந்தான்.
இதையடுத்து இந்த போலீசார் மீது உயர் அதிகாரிகள் ஒரு குழு அமைத்து ரகசிய விசாரணை நடத்தினர். அதில்,இவர்கள் நகையைப் பதுக்கிய விவரம் தெரியவந்தது.
உடனடியாக இந்த 8 போலீஸ் திருடர்களையும் இடை நீக்கம் செய்ய கோயம்புத்தூர் டி.ஐ.ஜி. அசுதோஷ் சுக்லாஉத்தரவிட்டார்.