குடிப்பதற்கு காசு கொடுக்க மறுத்த நண்பருக்கு கத்திக்குத்து
சென்னை:
குடிக்க காசு கொடுக்காத நண்பரைக் கத்தியால் குத்தியவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சென்னை அருகேயுள்ளது கும்மிடிப்பூண்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ரகு. இவரது நண்பர் மனோகர் மற்றும்குமார். மனோகருக்கு குடிப்பழக்கம் உள்ளது.
தான் குடிப்பதற்கு அடிக்கடி ரகுவிடம் காசு கேட்டு தொந்தரவு செய்வது அவருக்கு வழக்கமாம்.
மேலும், ரகு வாங்கிக் கொண்டு வரக் கூறியதாகக் கூறி ரகுவின் மனைவியிடம் அடிக்கடி பணம் பெற்றுச்செல்வாராம் மனோகர். இது ரகுவுக்குத் தெரிய வரவே தனது மனைவியிடம் நடந்ததைக் கூறி இனிமேல் வந்தால்காசு கொடுக்காதே என்று கூறியுள்ளார்.
இதையறிந்த மனோகர் ஆத்திரமடைந்தார். அவரும், குமாரும் சேர்ந்து ரகுவை தனியாக ஒரு இடத்திற்குக் கூட்டிப்போனார்கள். அங்கு அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். பலத்த காயத்துடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார் ரகு.
குமாரையும் மனோகரையும் போலீசார் தேடி வருகின்றனர்.