குண்டூஸ் நகரை முழுவதுமாக இழந்தனர் தலிபான்கள்
காபூல்:
ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான குண்டூசின் முழுவதையும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தங்கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.
நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்கு ஆதரவாக அமெரிக்க விமானங்களும் தலிபான்கள் குவிந்துள்ளபகுதிகளைக் குண்டு வீசித் தாக்கின.
அமெரிக்க விமானங்களின் தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தரைப் படை கமாண்டோக்கள் வழிகாட்ட, தலிபான்கள் மீது அமெரிக்கவிமானங்கள் சராமாரியாக குண்டு மழை பொழிந்தன.
இத்தாக்குதலில் ஒரு அமெரிக்க தரைப்படை கமாண்டோவும் பலியானார்.
இதற்கிடையே ஆயிரக்கணக்கான தலிபான்கள் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரிடம் தொடர்ந்து சரணடைந்துகொண்டே இருந்தனர். இதையடுத்து, குண்டூஸ் நகருக்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நுழைந்த நார்த்தர்ன்அலையன்ஸ் படையினர், அந்நகர் முழுவதையும் தங்கள் வசம் கொண்டு வந்தனர்.
சரணடைந்தவர்களில் ஏராளமான பாகிஸ்தான் வீரர்களும் இருந்தனர். மேலும் நூற்றுக்கணக்கான அரபு மற்றும்செசன்யா நாட்டவர்களும் சரணடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications