ராஜகோபாலிடம் விரைவில் போலீஸ் விசாரணை ஆரம்பம்
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் விரைவில் போலீஸ் காவலுக்கு மாற்றப்படுவார் என்று தெரிகிறது.அப்படி மாற்றப்பட்டால் விசாரணையின்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும்கூறப்படுகிறது.
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் திருமணமான பெண்ணை மிரட்டி கல்யாணம் செய்ய முயன்றதாகவழக்கில் சிக்கியுள்ளார். புகார் கொடுத்த பெண்ணான ஜீவஜோதி தனது பெற்றோர் மீதும் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழகத்தையே இந்தப் புகார் கிடுகிடுக்க வைத்துள்ள நிலையில் தற்போது ராஜகோபால் நீதிமன்றத்தில்சரணடைந்துள்ளார்.
அவரை போலீஸ் காவலுக்கு மாற்றுமாறு வேளச்சேரி போலீசார் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்தமனு திங்கள்கிழமை பிற்பகலில் விசாரிக்கப்படுகிறது. ராஜகோபாலை போலீஸ் காவலுக்கு மாற்ற கோர்ட்அனுமதிக்கும் என்றே தெரிகிறது.
போலீஸ் காவலுக்கு ராஜகோபால் மாற்றப்பட்டால் உண்மையில் என்ன நடந்தது என்ற விவரம் தெரிய வரும்.மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications