பொடோவை எதிர்ப்பவர்களுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
"பொடோ" சட்டத்தை எதிர்க்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்ப்பது தவறு என்று மத்திய இளைஞர் நலத்துறைஇணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நாட்டு நலனைக் கருதியே பொடோ சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை சரியாக புரிந்து கொள்ளாமல்எதிர்க்கட்சிகள் அதை எதிர்ப்பது தவறானதாகும்.
பயங்கரவாதிகளால் பெரும் பாதிப்படைந்துள்ள நமது நாட்டுக்கு இதுபோன்ற கடுமையான சட்டம் கண்டிப்பாகதேவை.
பொடோ சட்டத்தை சரியாக புரிந்து கொண்டு அதை வரவேற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின்முடிவு பாராட்டுக்குரியது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications