சென்னை துறைமுகத்தில் மீண்டும் அமெரிக்க போர்க் கப்பல்
சென்னை:
அமெரிக்காவின் போர்க் கப்பலான யு.எஸ்.எஸ். ஜான் யங், இன்று (திங்கள்கிழமை) சென்னை துறைமுகத்துக்குவந்து சேர்ந்துள்ளது.
எண்ணெய் நிரப்புவதற்காகத்தான் இந்தக் கப்பல் இங்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சுமார் 563 அடி நீளமுள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ். ஜான் யங் 9,153 டன் எடைகொண்டது. மணிக்கு 30 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது.
சுமார் 300 அமெரிக்க கடற்படை வீரர்கள் உள்ள இந்தக் கப்பலில், ஏவுகணை வீசும் வசதி உள்ளதாகவும்கூறப்படுகிறது.
ஜப்பானிலிருந்து சென்னை வந்துள்ள யு.எஸ்.எஸ். ஜான் யங், இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குசென்னைத் துறைமுகத்தில் இருக்கும் என்று அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்க போர்க் கப்பலான யு.எஸ்.எஸ். ஓப்ரியன் சென்னைதுறைமுகத்துக்கு வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications