மீண்டும் விஷச் சாராயம்: காஞ்சிபுரம் அருகே பெண் உள்பட 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே விஷச் சாராயம் குடித்ததால் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 24 பேர்மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரபாக்கம் அருகே தின்னம்பூண்டி கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை கொடி கட்டிப்பறக்கிறது.

சென்னை அருகே இரண்டு முறை கள்ளச்சாராயம் அருந்தி பல பேர் உயிரிழிந்த சம்பவத்திற்குப் பிறகும் இந்தகிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை குறையவில்லை. அதைக் குடிப்போரும் திருந்திய பாடில்லை.

இந்நிலையில் திங்கள்கிழமை இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சில கூலித் தொழிலாளர்கள் சாராய பாக்கெட்டுகளைவாங்கிச் சென்றனர்.

அவர்களில் சவர நிாயகம், வேளாங்கண்ணி (பெண்), சின்னப்பன் ஆகியோர் இந்தச் சாராயத்தைக் குடித்த சிறிதுநேரத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். 24 பேர் மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த 24 பேரும் செங்கல்பட்டு அரசுமருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 10 பேர் வரை கவலைக்கிடமாக உள்ளதாககூறப்படுகிறது.

சம்பவம் குறித்த அறிந்த மாவட்ட எஸ்.பி. மாசானமுத்து, போலீஸாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். மதுவைவிற்ற செல்வராஜ் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுவில் விஷம் கலக்கவில்லை என்றும் அதிக அளவில் குடித்த காரணத்தால்தான் மூன்று பேரும் உயிரிழந்தனர்என்று மாசானமுத்து கூறியுள்ளார்.

ஆனால் போதை அதிகம் ஏறுவதற்காக சேர்க்கப்பட்ட வேதிப் பொருள் அதிக அளவில் சேர்க்கப்பட்டதால்தான்இந்தச் சாராயம் விஷமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+