சேலம்: சிறுவனை சித்ரவதை செய்த வளர்ப்புப் பெற்றோர்
சேலம்:
சேலத்தில் சிறுவன் ஒருவனை விரும்பித் தத்தெடுத்த தம்பதியினரே சித்தரவதை செய்ததால், அச்சிறுவன் தற்போதுபள்ளி நிர்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
திருச்சி மாவட்டம் ஓமாந்தூரைச் சேர்ந்த சேகர், சேலத்தைச் சேர்ந்த தேன்மொழி ஆகியோரின் மகன் பாலாஜி.பாலாஜி பிறந்தவுடன் அவனது தாய் தேன்மொழி இறந்துவிட்டார்.
இதனால் பாலாஜியின் தந்தை சேகர் தனது மூத்த மகளைத் தனது தாயிடமும், இளைய மகளை இலங்கையில் உள்ளதனது சகோதரியிடமும் வளர்க்கக் கொடுத்து விட்டார். தனது மகன் பாலாஜியை சேலத்தில் உள்ள அவனது சித்திசரோஜாவிடம் வளர்ப்பதற்காகக் கொடுத்துவிட்டு, சேகர் மறுமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் சரோஜாவிடம் சேலத்தில் வளர்ந்த பாலாஜியை 5 வருடங்கள் கழித்து, சரோஜாவின் தம்பிரவிச்சந்திரன், இந்திரா பிரியதர்ஷினி தம்பதியினர் குழந்தை இல்லாததால் வளர்க்க விரும்பினார்கள். இதனால்பாலாஜி சரோஜாவிடம் இருந்து அவர்களிடம் கொடுக்கப்பட்டான்.
இந்நிலையில் சிறுவன் பாலாஜியைத் தத்தெடுத்து 2 மாதங்களில் அவனை ரவிச்சந்திரனும் அவரது மனைவியும்சித்திரவதை செய்ய ஆரம்பித்தனர். கண்ணம் உட்பட பல்வேறு இடங்களில் பாலாஜிக்கு சூடு போடப்பட்டுள்ளது.
இந்தச் சித்திரவதைகளைத் தாங்க முடியாமல் பாலாஜி தான் படிக்கும் கொண்டலாம்பட்டி பள்ளியின் தலைமைஆசிரியரிடம் சென்று முறையிட்டுள்ளான். இனிமேல் நான் வீட்டுக்குப் போகமாட்டேன் என்றும் பள்ளியிலேயேதங்க என்னை அனுமதிக்க வேண்டும் என்றும் அந்தச் சிறுவன் கேட்டுள்ளான்.
இதையடுத்து பள்ளித் தலைமையாசிரியர், அன்னதானப்பட்டி போலீஸ் ஷ்டேஷனில் இதுகுறித்துப் புகார் செய்தார்.
போலீசார் சிறுவன் பாலாஜியிடமும், அவனைக் கொடுமைப் படுத்திய ரவிச்சந்திரன் தம்பதியரிடமும் விசாரித்துபுகாரை உறுதி செய்தனர். பின்னர் பாலாஜியை பள்ளி நிர்வாகப் பொறுப்பில் ஒப்படைத்ததோடு, அவனது அப்பாசேகருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications