For Daily Alerts
Just In
சென்னையில் கர்நாடக போலீஸ் படை: கோபால் கைதாகிறார்
சென்னை:
நக்கீரன் ஆசிரியர் கோபாலைக் கைது செய்வதற்காக கர்நாடக போலீஸ் படை சென்னை வந்துள்ளது.
கடந்த ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தியதன் பின்னணியில் கோபாலுக்கும்தொடர்பிருப்பதாக என்று கர்நாடக போலீசார் கூறுகின்றனர்.
ராஜ்குமாரைக் கடத்துவதற்காகத் திட்டம் தீட்டியது, அதற்கு உறுதுணையாக இருந்தது, வீரப்பனுக்குப் பல்வேறுதகவல் தொடர்பு சாதனங்களைக் கொடுத்து உதவியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கோபால் மீதுசுமத்தப்பட்டுள்ளன.
கடந்த வாரம் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்ட நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம் கொடுத்துள்ளவாக்குமூலத்தின் அடிப்படையில் கோபாலைக் கைது செய்ய முயற்சி நடக்கிறது.
இதற்காக கர்நாடக போலீசார் சென்னை வந்திருப்பதாக தமிழக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments
Story first published: Wednesday, November 28, 2001, 5:30 [IST]