"சரவண பவன்" ராஜகோபால் ஜாமீன் மனு தள்ளிவைப்பு
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணைதள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ராஜகோபாலை விசாரணைக்கு ஒப்படைக்கக் கோரி வேளச்சேரி போலீஸார் தாக்கல் செய்த மனுமீதான விசாரணையும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
திருமணமான ஜீவஜோதி என்ற பெண்ணை மிரட்டி கல்யாணம் செய்து கொள்ளக் கோரி கட்டாயப்படுத்தியதாகராஜகோபால் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்து வந்த அவர் காஞ்சிபுரம் கோர்ட்டில்சரண் அடைந்தார்.
தற்போது ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதிஅசோக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில்பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வரும் 30ம் தேதிக்குவிசாரணையை நீதிபதி அசோக்குமார் தள்ளிவைத்தார்.
இதேபோல, ராஜகோபாலை விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்கக் கோரி வேளச்சேரி போலீஸார் தாக்கல்செய்திருந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் ஒரு நாள் அவகாசம் கேட்டிருந்தார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையும் தீர்ப்பை தள்ளிவைத்தார். புதன்கிழமை இதில் தீர்ப்பு வழங்கப்படும் என்றுதெரிகிறது.