அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் வசூல்
சென்னை:
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் புற நோயாளிகளுக்கும் சில சிறப்புச் சிகிச்சைகளுக்கும் இனிகட்டணம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
காயம், காய்ச்சல் போன்ற சிறிய சிகிச்சைகளுக்கு புற நோயாளிகளாக வந்து செல்வோருக்கு இனி ரூ. 5 கட்டணம்வசூல் செய்யப்படும்.
அதே போல அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்க்கச் செல்லும் பார்வையாளர்களிடம் இனிமேல் 5ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட பல படிப்புக்கான சீட்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதை அரசே விற்கவும் முடிவுசெய்துள்ளது.
இப்போதுள்ள சீட்களின் எண்ணிக்கையை 50 சதவீத அளவுக்கு அதிகரித்து அவற்றை வெளிநாடு வாழ்இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ. கோட்டா) கட்டண ஒதுக்கீட்டின் கீழே ஒதுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
மருத்துவனைகளில் சிறப்புச் சிகிச்சை பெற வந்தாலும் கட்டணம் வசூலிக்கப்படும்.












Click it and Unblock the Notifications