ஆப்கானிஸ்தான் சிறைக் கலவரம் தொடர்கிறது
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் காலா-ஏ-ஜங்கி சிறைச்சாலையில் நடந்த கலவரம் இன்னும் முடிவக்கு வரவில்லை என்றும்சண்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் டொனால்டுரம்ஸ்பீல்டு கூறினார்.
இந்தச் சண்டை தொடர்ந்து இன்னும் நடந்துகொண்டிருக்கிறது என்று ரம்ஸ்பீல்டு கூறினார். இதுகுறித்து அவர்இன்று (செவ்வாய்க்கிழமை) புளோரிடாவில் நிருபர்களிடம் கூறுகையில்,
அந்தச் சிறைச்சாலையில் சண்டை முடிந்துவிட்டது என்று சொல்வது தவறு. இன்னும் சண்டை நடந்து கொண்டுதான்இருக்கிறது. இன்று காலையில் கூட சில வீரர்கள் கொல்லப்பட்டதாக எனக்குத் தகவல் வந்தது.
சிறைக்குள் இருந்த ஒரு கைதி திடீரென்று ஒரு கையெறி குண்டை எறிந்து சிறைக்குள் அவனைச்சுற்றியுள்ளவர்களைக் கொல்ல முயன்றுள்ளான்.
அல்-காய்தா மீது தாக்குதல்
தற்போது காண்டஹாருக்குத் தெற்கே உள்ள அல்-காய்தா மற்றும் தலிபான்களின் மறைவிடங்களின் மீது தாக்குதல்நடத்தப்பட்டதை நான் டிவியில் பார்த்தேன். இந்தத் தாக்குதலில் அல்-காய்தா மற்றும் தலிபான்களின் சில முக்கியத்தலைவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஏனென்றால் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் அவர்களின் தலைவர்கள் பதுங்கியுள்ள இடம் தான் என்றார்.
ஆனால் தலிபான் தலைவர் முல்லா உமர் அந்த இடங்களில் இருந்து தப்பிவிட்டார் என்று பாகிஸ்தானுக்கானமுன்னாள் தலிபான் தூதர் அறிவித்துள்ளார்.