For Daily Alerts
Just In
மாநிலம் முழுவதும் தனியார் பஸ்களுக்கு அனுமதி
சென்னை:
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வழித் தடங்களில் தனியார் பஸ்களுக்கு அனுமதியளிக்கஅரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் வருவாயைப் பெருக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் தனியார் சிட்டி பஸ்கள் அனுமதிக்கப்படும்.
அதே போல தற்போது தமிழகத்தில் 19 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. ஒவ்வொரு கழகத்துக்கும் ஒரு நிர்வாகஇயக்குனர், மேனேஜர்கள், கட்டடங்கள் உள்ளன. இதனால் நிர்வாகச் செலவே கோடிக்கணக்கில் ஆகிறது.
இதனால் இந்த 19 போக்குவரத்துக் கழகங்களையும் இணைத்து வெறும் 7 போக்குவரத்துக் கழகங்களாக மாற்றஅரசு முடிவெடுத்துள்ளது.
டிரைவர், கண்டக்டர்களைத் தவிர்த்து உள்ள மற்ற ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அரசு முடிவுசெய்துள்ளது.
மோட்டார் வாகனங்களுக்கான வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
Story first published: Wednesday, November 28, 2001, 5:30 [IST]