முன் ஜாமீன் கேட்கிறார் கோபால்
சென்னை:
ராஜ்குமார் கடத்தல் வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கேட்டு "நக்கீரன்" ஆசிரியர் கோபால் இன்று(வியாழக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பாக கோபாலை கர்நாடக போலீசார் தேடி வரும்வேளையில், உயர் நீதிமன்றத்தில் கோபால் சார்பாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் கோபால்கூறியிருப்பதாவது:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதற்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.
அவரை மீட்டுக் கொண்டு வருவதற்காக தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் என்னைக் கேட்டுக் கொண்டன.
அதன் அடிப்படையில்தான் நான் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி வைத்திருந்த காட்டுக்குள் சென்று, பேச்சுவார்த்தைநடத்தினேன்.
இதைத் தவிர எனக்கும் வீரப்பனுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது.
ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக கர்நாடக போலீசார் என்னைத் தேடிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதால், எனக்குமுன் ஜாமீன் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கோபால் அம்மனுவில் கூறியுள்ளார்.
கோபாலின் இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications