கட்டண உயர்வை பொறுத்துக் கொள்ளுங்கள்: ஜெ. கோரிக்கை
சென்னை:
கட்டண ஏற்றங்களை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று தமிழக மக்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பஸ் கட்டணம், பால்விலை, மின் கட்டணம் ஆகியவை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்துஜெயலலிதா நிருபர்களிடம் கூறியதாவது:
மன மகிழ்ச்சியோடு இதை தமிழக அரசு செய்யவில்லை. கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியின்போதுஒவ்வொரு துறையிலும் ரூ.2000 கோடி, ரூ.3000 கோடி அளவுக்கு நிதி சீர்கேடு நடந்துள்ளது.
அதை சமாளிக்கவே இதுபோன்ற கடுமையான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாயிற்று.
1989 முதல் 1991 வரை பதவியில் இருந்த திமுக ஆட்சி மற்றும் 1996 முதல் 2001 வரையில் பதவியில் இருந்ததிமுக ஆட்சிக்காலங்களில் கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
1996ம் ஆண்டு அதிமுக ஆட்சி பதவியிலிருந்து விலகியபோது ரூ.800 கோடி அளவுக்கு உபரி நிதியை விட்டுச்சென்றிருந்தோம். ஆனால் பின்னர் வந்த திமுக ஆட்சியினர் அதை சீர்கெடுத்து விட்டனர்.
அரசின் நிதி நெருக்கடியை உணர்ந்து பொதுமக்கள் இந்த நிதி சீரமைப்பு நடவடிக்கையை பொறுத்தக் கொண்டுஅரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.