மக்கள் தலையில் இடியென இறங்கியுள்ளது: வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மக்களின் தலையில் இடியென இறங்கியுள்ளது இந்த கட்டண உயர்வு. இதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாதுஎன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

எம்.ஜி.ஆர். ஆட்சியை நடத்துவதாக கூறிக் கொண்டு இப்படி பாமர மக்களை வருத்தும் விதமாக கட்டண உயர்வைஅறிவித்துள்ளது அதிமுக ஆட்சியின் முரண்பாட்டையேக் காட்டுகிறது.

இந்த கட்டண உயர்வு மூலம் அரசுக்கு வேண்டுமானால் வருவாய் கிடைக்கலாம், ஆனால் இந்தக் கட்டண உயர்வைசமாளிக்கும் வகையிலான சம்பள உயர்வு பொதுமக்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்?

மக்களின் தலையில் இடியென இறங்கியுள்ளது இந்த கட்டண உயர்வு. இதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.மக்களுக்காக வாழ்ந்த எம்.ஜி.ஆரின் பெயரை சொல்லிக் கொண்டு ஆட்சி நடத்தும் அதிமுகவின் லட்சணம்இதுதானா என்று கூறியுள்ளார் அவர்.

த.மா.கா.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமர மக்களுக்கு அதிக சுமையைக் கொடுக்கக்கூடியதாக இந்த விலையேற்ற அறிவிப்புகள் உள்ளதாக கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் நல்லக்கண்ணுவும் விலைவாசி உயர்வுக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+