அரசு அலுவலகங்களில் ஆள் குறைப்பை எதிர்த்து பாமக பட்டினிப் போர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு அலுவலகங்களில் 30 சதவீத ஆள் குறைப்பு செய்யப்படும் என்று தமிழக அரசுஅறிவித்திருப்பதை எதிர்த்து சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர் சங்கமும் இணைந்து பட்டினிப்போர் நடத்தின.

வயிற்றிலும் நெற்றியிலும் நாமத்தைப் போட்டுக் கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட பாமக மற்றும் வன்னியர்சங்க உறுப்பினர்கள் இந்தப் பட்டினிப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சென்னை அரசினர் விருந்தில்லத்திற்கு எதிரே நடந்த இந்தப் போராட்டத்தைத் துவக்கி வைத்த பாமக தலைவர்டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

அரசுப் பணிக்கு ஆள் குறைப்பு செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.அதுவும் நாளைக்குள்ளாக வாபஸ் பெற வேண்டும்.

இல்லையென்றால், எங்கள் போராட்டம் தீவிரமாகும். மாநிலத்திலுள்ள பல்வேறு சமுதாயத் தலைவர்களைச் சந்தித்து,அவர்களை ஒன்றிணைத்து பேசி முடிவு செய்தபின் அரசுக்கு எதிரான எங்கள் போராட்டத்தைத்தீவிரப்படுத்துவோம் என்றார் ராமதாஸ்.

அதிமுக ஆட்சிக்கு வரும்போது அக்கட்சியுடன்தானே இருந்தீர்கள் என்று நிருபர்கள் ராமதாசிடம் கேட்டதற்கு,"நம்பித்தான் கூட்டணியில் சேர்ந்தோம். ஆனால் அவர்கள் நெஞ்சிலும் முதுகிலும் குத்திவிட்டனர்" என்றுபதிலளித்தார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+