ரேடாரில் பதிவான ஹெலிகாப்டர்
சென்னை:
இந்திய விமானத்துறையின் ரேடாரில் பதிவான அமெரிக்க ஹெலிகாப்டரின் பயணப் பாதையை அதிகாரிகள்பார்வையிட்டனர்.
இந்த அதிகாரிகள் விமானப் பாதுகாப்புத்துறை செயலாளர் ராம்பட் தலைமையில் இன்று காலை சென்னைவந்தனர். இந்த ஹெலிகாப்டர் பறந்த பாதை முழுக்க முழுக்க சென்னை விமான நிலைய ரேடாரில் பதிவாகியுள்ளது.கடற்படையின் ரேடார்களிலும் இது பதிவாகியுள்ளது.
விமான நிலைய ரேடாரில் பதிவான இந்த ஹெலிகாப்டரின் இயக்கத்தை வீடியோவாக மாற்றி இந்தக் குழுவிடம்விமானத் துறை வழங்கியது. அதை அதிகாரிகள் காலை பார்வையிட்டனர்.
விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து இந்த ஹெலிகாப்டருக்கு சென்ற ரேடியோ தகவல்களை இந்தக்குழு இப்போது ஆராயந்து வருகிறது. ரேடியோ மூலம் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரி இந்த ஹெலிகாப்டரைத்தொடர்பு கொண்டபோது அதில் இருந்த அமெரிக்க வீரர்கள் பதிலே கூறாமல் தொடர்ந்து பறந்ததாகக்கூறப்படுகிறது.
இதை மத்தியக் குழு விசாரிக்கிறது.
சென்னை வான் மீதும், கல்பாக்கம் அணு மின் நிலையம் மீதும் இந்த ஹெலிகாப்டர் அனுமதியின்றிப் பறந்து உளவுபார்த்தாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications