கோவில் காவலாளி கொலை: ரூ.2 லட்சம் கொள்ளை
சென்னை:
சென்னை அருகே நேற்று (புதன்கிழமை) இரவு ஒரு கும்பல் கோவில் காவலாளியைக் கொன்று அங்குள்ளஉண்டியலை உடைத்து சுமார் ரூ.2 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
சென்னையை அடுத்த பாடியில் உள்ளது படவட்டம்மன் கோவில். நேற்றிரவு இந்தக் கோவிலுக்குள் புகுந்த கும்பல்அங்கிருந்த காவலாளி பாலையாவை அடித்து, கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளது.
பின்னர் அந்தக் கொலைகாரக் கும்பல் கோவிலிலிருந்த உண்டியலை உடைத்து ரூபாய் நோட்டுக்களை எல்லாம்அள்ளிக் கொண்டு ஓடி விட்டது. இன்று காலை பார்த்தபோது உண்டியலுக்கு வெளியே சிறிது சில்லரைக் காசுகள்மட்டுமே சிதறிக் கிடந்தன.
வழக்கமாக இரண்டுமாதங்களுக்கு ஒரு முறை இந்த உண்டியலைத் திறந்து பணத்தை எண்ணும்போது, ரூ.2லட்சத்துக்கும் குறையாமல் பணம் இருக்குமாம்.
அதன்படி நாளைதான் இந்த உண்டியலைத் திறக்கவிருந்ததாக அந்தக் கோவிலைச் சேர்ந்த ஒருவர் கூறினார். இதைவைத்துத்தான் சுமார் ரூ.2 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications