For Quick Alerts
For Daily Alerts
Just In
ஈரோடு விபத்து: இறந்தவர் குடும்பங்களுக்கு அரசு உதவி
சென்னை:
ஈரோடு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்த 6 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 50,000 வழங்கஉத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஈரோடு மாவட்டம் பள்ளிகவுண்டன்பாளையம் அருகே டாடா சுமோ காரில் பயணம் செய்த 6 பேர் லாரி மோதிஇறந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 நிதியும், படுகாயமடைந்துள்ளவர்களுக்கு தலா ரூ.15,000நிதியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.6000 நிதியும் வழங்க பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 3 பேருக்கும் சிறப்பான சிகிச்சைஅளிக்குமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Friday, November 30, 2001, 5:30 [IST]