For Daily Alerts
Just In
2வது வகுப்பு மாணவியை அடித்துக் கொன்ற ஆசிரியர் சஸ்பெண்ட்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் தாளக்குடி என்ற இடத்தில் 2-வது வகுப்பு படித்த மாணவி அனுஷாவை அடித்துக்கொன்ற பள்ளி ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தாளக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தவர் அனுஷா. இரண்டாவது வகுப்பு படித்து வந்த இவரை நேற்று(வியாழக்கிழமை) ஏதோ காரணத்திற்காக பள்ளி ஆசிரியர் அடித்துள்ளார்.
அவர் அடித்தவுடன் அனுஷா மயங்கி விழுந்தாள். உடனே அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். ஆனால்மயக்கம் தெளியாத அனுஷா இன்று காலை இறந்தாள்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை மாட்ட கல்வி அலுவலர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Comments
Story first published: Friday, November 30, 2001, 5:30 [IST]