For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜீவஜோதியின் கணவர் உயிரோடு இருக்கிறாரா? போலீசுக்கே சந்தேகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலால் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தப்பட்ட ஜீவஜோதியின்கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை என்று சென்னை மாநகரபோலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறினார்.

சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல ஓட்டல் சரவணபவன் அதிபர் ராஜகோபால், ஏற்கனவேதிருமணமான ஜீவஜோதி என்ற பெண்ணை கட்டாயப்படுத்தி தனக்கு மூன்றாம் தாரமாக்க முயன்றதாக அவர் மீதுபுகார் கூறப்பட்டது. இதையடுத்து ராஜகோபால் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். பிறகு கடந்த வாரம்காஞ்சிபுரம் கோர்ட்டில் தனது உதவியாளர்கள் 15 பேருடன் சரணடைந்தார்.

மேலும் ராஜகோபாலின் ஆட்களால் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்பட்டார் என்று ஜீவஜோதிசார்பில் புகார் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று (வியாழக்கிழமை) சென்னையில் நிருபர்களிடம் அவர் மேலும்கூறியதாவது,

சரவணபன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் மீது ஜீவஜோதியையும், அவரது கணவரையும் கடத்திச் சென்ற வழக்கு,ஜீவஜோதியின் வீட்டை அடியாட்கள் மூலம் காலிசெய்த வழக்கு, திருநெல்வேலியில் வைத்து ஜீவஜோதியின்கணவரைக் கடத்திய வழக்கு ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடத்திச் செல்லப்பட்ட சாந்தக்குமார் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறாராஅல்லது கொலை செய்யப்பட்டரா என்பது ராஜகோபாலிடம் நடத்தப்படும் விசாரணையில் தான் தெரியவரும்என்றார் முத்துக்கருப்பன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X