தமிழக போலீசுக்கு பத்திரிக்கை கவுன்சில் கண்டனம்
டெல்லி:
கருணாநிதி கைது செய்யப்பட்டபோதும், பின்னர் நடந்த சம்பவங்களின்போதும் சென்னையில் நிருபர்களைபோலீசார் திட்டமிட்டுத் தான் தாக்கினர் என விசாரணைக் குழு குற்றம் சாட்டியுள்ளது.
தமிழத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவிட்டது. திமுகதலைவர் கருணாநிதி கைது சம்பவத்தின்போதும், கைதை கண்டித்து திமுக நடத்திய பேரணியின்போதும்நிருபர்களை தனியே சூழ்ந்து நின்று கொண்டு போலீசாரும் ரெளடிகளும் தாக்கினர்.
இது குறித்து இந்திய பத்திரிக்கை கவுன்சிலின் 5 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. டிர்பியூன் நாளிதழின்எடிட்டர் ஹரி ஜெய்சிங் இந்தக் குழுவுக்குத் தலைமை வகித்தார். இக் குழு சமர்பித்துள்ள அறிக்கையில் தமிழகபோலீஸ் துறை மீது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:
உண்மைச் சம்பவங்களை நிருபர்கள் போட்டோ எடுத்துவிடக் கூடாது என்பதைத் திட்டமிட்டே போலீசார்தடுத்துள்ளனர். இதற்காகத் தான் நிருபர்களை தாக்கினர்.
கருணாநிதி கைது செய்யப்பட்டதை சன் டிவியில் காட்டியபோது மக்கள் மத்தியில் போலீஸ் அராஜகத்துக்குஎதிரான கருத்து கிளம்பியது. இதே போல போலீசுக்கு எதிரான, அரசுக்கு எதிரான தகவல்கள் வெளியில்போய்விடக் கூடாது என்பதற்காகத் தான் திமுக பேரணியில் நிருபர்கள் மீது போலீஸ் தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் போலீசாருக்கு பயிற்சி போதவில்லை. சென்னை போலீஸ் கமிஷ்னர் முத்துக் கருப்பனின் பாஷையில்சொன்னால், போதிய பயிற்சி இல்லாததால் தான் போலீசார் காக்கிச் சட்டை போட்டுக் கொண்டு கிரிமினல்வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
சட்டம் ஒழுங்கை காக்கிறோம் என்று கூறிக் கொண்டு போலீசாரே அராஜகத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.
போலீஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நிருபர்களுக்கு உடனடியாக போதிய நஷ்டஈடு வழங்கவேண்டும்.உடைக்கப்பட்ட கேமராக்கள், லென்ஸ்கள், மொபைல் போன்களுக்கும் நஷ்ட ஈடு தர வேண்டும்.
ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான ஜெயா டிவிக்கு முக்கியத்துவம் தருவது, பிற பத்திரிக்கையாளர்களைஒதுக்குவது போன்ற செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்!












Click it and Unblock the Notifications