குண்டு தாக்குதலில் ஒசாமாவின் தளபதி குடும்பமே பலி
வாஷிங்டன்:
அமெரிக்க விமானத் தாக்குதலில் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் முக்கிய தளபதி அய்மன் அல்ஜவாஹிரியின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆப்கானில் உள்ள நங்கார்ஹர் மாகாணத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள தலைவர்களில்ஒருவரான, ஹாஜி முகமது ஜமன் கூறுகையில்,
பின்லேடனின் மிக முக்கிய தளபதியும், எகிப்தைச் சேர்ந்த டாக்டருமான அய்மன் அல் ஜவாஹிரி அமெரிக்கவிமானத் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.
மேலும், இந்தத் தக்குதலில் பின்லேடனின் அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தின் பொருளாளராக இருந்த அலிமமூது கொல்லப்பட்டார் என்று ஜமன் கூறினார்.
ஆனால், இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த திங்கள்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில்அய்மன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டாரா அல்லது காயமடைந்தாரா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால்அவரது மனைவி, மகன் மற்றும் 3 மகள்கள் ஆகியோர் கொல்லப்பட்டனர் என்று உறுதியாகத் தெரிகிறது என்றனர்.
அகதிகள் மீது அமெரிக்க விமானம் தாக்குதல்
காண்டஹாரில் அமெரிக்கத் தாக்குதல் அதிகரித்து வருவதால், அந்தப் ழுகுதிகளில் இருந்து பாகிஸ்தானை நோக்கி2 டிராக்டர்களில் வந்துகொண்டிருந்த அகதிகள் மீது அமெரிக்க விமானம் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள்அனைவரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதை நேரில் பார்த்த ஹம்துல்லா என்பவர் கூறும்போது, 2 டிராக்டர் முழுவதும் மக்கள் அனைவரும் கடும்பம்குடும்பமாக காண்டஹாரைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். அந்த டிராக்டர்கள் காண்டஹாரைத் தாண்டியசில நிமிடங்களில், அமெரிக்க விமானங்கள் அவற்றின் மீது தாக்குதல் நடத்தியதில் அனைவரும் கொல்லப்பட்டனர்என்றார்.
இதற்கிடையில் காண்டஹாரிலிருந்து வெளியேறி பாகிஸ்தானுக்கும், ஆப்கானுக்கும் இடைப்பட்ட மனிதர்கள்வாழமுடியாத பகுதிகளில் 3,000 பேர் உணவு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.