ஜனவரி 5ம் தேதி காங்கிரசில் இணைகிறார் வாழப்பாடி
சென்னை:
ஜனவரி மாதம் 5ம் தேதி மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திமுன்னிலையில் வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரசில் இணைகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்கூறினார்.
இதுகுறித்து இன்று(வியாழக்கிழமை) சென்னையில் அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது,
வரும் ஜனவரி 5ம் தேதி மதுரையில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெறுகிறது. அதில் அகிலஇந்தியக் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அப்போது தமிழக ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரசில் இணைகிறார்.
நாளை எதிர்க்கட்சிகள் நடத்தத் திட்டமிட்டுள்ள பந்த் முழுவெற்றிபெறும். விலை உயர்வை முழுமையாக வாபஸ்பெறும்வரை காங்கிரஸ் போராடும். தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள கட்டணக் குறைப்பு யானைப் பசிக்குசோளப்பொறி கொடுப்பது போல உள்ளது.
டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் ஜெயலலிதா -விடுவிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சிதான்என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications