இந்தியா வந்தார் ஆப்கானிஸ்தான் அமைச்சர்
டெல்லி:
ஆப்கானிஸ்தான் புதிய அரசின் உள்துறை அமைச்சர் யூனுஸ் கானூனி இந்தியா வந்துள்ளார். இவர் நார்த்தர்ன்அலையன்ஸ் படையின் உள்துறை அமைச்சராக இருந்தவர். புதிய அரசிலும் அதே பொறுப்பில் தொடர்கிறார்.
இவர் ஆப்கானிஸ்தானில் அமையவுள்ள இடைக்கால அரசு பற்றியும், அந்த அரசு மேற்கொள்ள இருக்கும்நடவடிக்கைகள் குறித்தும் இந்தியத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோரை கானூனி சந்திக்கஉள்ளார்.
ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசில் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின் கானூனி முதன்முதலில் பயணம் செய்யும்நாடு இந்தியா தான். சமீபத்தில் இவர் தான் நார்த்தர்ன் அலையன்ஸ் சார்பில் ஜெர்மனியில் கலந்கு கொண்டகுழுவுக்குத் தலைவராக இருந்தார்.
இவர் இந்தியாவின் தீவிரமான ஆதரவாளர். இவருடன் சேர்ந்து வெளியுறவு அமைச்சராக பதவியேற்க உள்ளடாக்டர் அப்துல்லா அப்துல்லா, பாதுகாப்பு அமைச்சர் முகம்மத் பகீம் ஆகியோரும் இந்தியாவுக்கு மிகநெருக்கமானவர்கள்.
தலிபான்களையும் பாகிஸ்தானையும் எதிர்த்துப் போராட இவர்கள் தலைமையில் இயங்கிய நார்த்தர்ன்அலையன்ஸ் படைக்கு இந்தியா நிதி, ஆயுத, மருத்துவ உதவிகளை வழங்கி வந்தது.
இப்போது இவர்கள் ஆட்சிக்கு வருவதையடுத்து இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவு மீண்டும் சுமூகமாகும். இதுபாகிஸ்தானுக்கு பெரும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.