போலீசாரால் கற்பழிக்கப்பட்ட ரீட்டா மேரிக்கு அரசு வீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செஞ்சி சிறைச்சாலையில் சிறை வார்டன்களாலும் போலீசாராலும் கற்பழிக்கப்பட்ட ரீட்டா மேரிக்கு தமிழக அரசு ரூ.5லட்சம் இழப்பீடு தவிர ஒரு அரசு வீட்டையும் ஒதுக்கித் தர முன்வந்துள்ளது.

ஐ.ஜி. திலகவதி கமிஷனின் பந்துரையின் பேரில் இந்த இழப்பீட்டுத் தொகை மற்றும் வீடு ஆகியவற்றை வழங்கஅரசு முடிவு செய்தது. திலகவதி கமிஷன் ரீட்டா மேரிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு தொகை தரலாம் என்றுபந்துரைத்திருந்தது. ஆனால் அதை ரூ. 5 லட்சமாக உயர்த்தித் தர அரசு முடிவு செய்துள்ளது.

ரீட்டா மேரியை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைத்து சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அரசுமுடிவு செய்துள்ளது.

இதற்காக அவரை மதுரையிலிருந்து சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர். அரசின் கோரிக்கைபடி மதுரைபீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பின் கண்காணிப்பின் கீழ் இருந்த அவர் போலீஸ் வேனில் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். அவருடன் அவரது தாயார் லீலாவதி, பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பைச் சேர்ந்த ஆண்டாள், திலகம், சமூகசேவகி லூசி சேவியர், 3 பெண் போலீஸார் உடன் சென்றுள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+