போலீஸ் செய்தது சரியே: தமிழக அரசு
சென்னை:
நேற்று (சனிக்கிழமை) நடந்த சட்டக் கல்லூரி மாணவர்கள்-பொதுமக்கள் மோதல் சம்பவத்தில் போலீசார்செய்ததுதான் சரி என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறியதாவது:
எப்படியாவது மாணவர்களை அப்புறப்படுத்தி, அவர்களை மீண்டும் விடுதியில் சேர்க்க வேண்டும் என்னும்முயற்சியில்தான் போலீசார் ஈடுபட்டனர்.
இதையும் மீறி மாணவர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மீதும் போலீசார் மீதும் அவர்கள் சராமாரியாகக்கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதற்குப் பிறகுதான் மாணவர்கள் மீதுதான் போலீசார் தடியடி நடத்தினார்கள்.
பின்னர் 35 சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டாலும் கூட, ஒரு மாணவர் கொடுத்த புகாரின்அடிப்படையில் 9 பொதுமக்களும் 6 ஓட்டல் ஊழியர்களும்கூட கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசார் அங்கு சென்ற பிறகுதான் கலவரம் வெடித்தது என்று சில அரசியல் கட்சிகள் கூறியுள்ளன. அது தவறுஎன்றார் நரேஷ் குப்தா.