For Daily Alerts
Just In
மேல்மருவத்தூர் அருகே கார், வேன் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் பலி
மேல்மருவத்தூர்:
மேல்மருவத்தூருக்கு அருகே காரும், வேனும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் நான்கு பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் ராமநாதபுரத்தை சேர்ந்தஅரசு அதிகாரி ராஜமாணிக்கமும் ஒருவர்.
காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]