ஆண்டிபட்டியில் காங்கிரஸ் தனித்து போட்டி: இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
தில்லி:
ஆண்டிபட்டியில் காங்கிரஸ் தனித்து போட்டியிட அனுமதியளிக்குமாறு மேலிடத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்.
ஆண்டிபட்டி தொகுதிக்கான இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவரைஎதிர்த்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ், ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் கூறி வருகின்றனர்.
ஆனால், அந்தத் தொகுதியில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று இளங்கோவன் கூறியுள்ளார். தற்போதுதில்லி சென்றுள்ள இளங்கோவன், சென்னிதாலாவைச் சந்தித்து இதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்றுகோரினார்.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடமும் இதுகுறித்து வேண்டுகோள் விடுக்கப் போவதாக இளங்கோவன்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications