போலீசார் மனித உரிமைகளை மீறில்: கிருஷ்ணசாமி குற்றசாட்டு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களுடன் சேர்ந்து நடத்த இருந்த போராட்டத்தைத் தடுப்பதற்காகவே வேறுவழக்கில் என்னை நவம்பர் 25ம் தேதி போலீசார் கைது செய்தனர் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி பேட்டியளித்துள்ளார்.
கோயம்புத்தூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
வால்பாறையில் உள்ள எஸ்டேட் தொழிலாளர்களை அன்றைய தினத்தில் வேலைக்கு போகும்படி அந்த மாவட்டபோலீஸ் அதிகாரி ஒருவர் வற்புறுத்தினார்.
வேலைக்கு போகவில்லை என்றால் கஞ்சா கடத்தியதாக கைது செய்து விடுவதாகவும் அவர்களைப் போலீசார்மிரட்டியுள்ளனர்.
ஜனநாயக நாட்டில் மக்கள் அனைவரும் அவர்கள் உரிமையை நிலைநாட்ட, போராட உரிமை இருக்கிறது.அவ்வாறு இருக்கையில் போலீசார் தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறையில் ஈடுபடுவதை நாங்கள்அனுமதிக்கமாட்டோம் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications