Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாந்தகுமார் கொலை வழக்கு: ராஜகோபால் டிரைவர் சரண்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கடத்தி, கொலை செய்ய பயன்பட்ட டாடா சுமோ காரை ஓட்டி வந்த டிரைவர்சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் உத்தரவுப்படி டேனியல்தலைமையிலான அடியாட்கள் திருநெல்வேலியில் இருந்து டாடா சுமோ காரில் கடத்தி சென்று கொலை செய்தனர்.

இந்த கொலையை டேனியல் தரப்பினர் செய்தபோது காரை ஓட்டி சென்றவர் டிரைவர் பட்டுராஜன் (35). இவர்தூத்துகுடி மாவட்டம் காயல்பட்டிணத்தை சேர்ந்தவர். இவர் டேனியலின் டிராவல்ஸ் கம்பெனியில் பலஆண்டுகளாக டிரைவராக இருக்கிறார்.

சாந்தகுமார் வழக்கில் இவர் முக்கிய குற்றவாளி என்பதால் போலீசார் இவரை தேடி வந்தனர். இந்நிலையில்,செஷன்ஸ் நீதிமன்றத்தில், தன்னை போலீசார் கைது செய்ய தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் 10வது நீதிமன்றத்தில் டிரைவர் பட்டுராஜன்சரணடைந்தார். சரணடைந்த இவரை 15 நாட்கள் நீதிமன்றத்தில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து அவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+