For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்கள் தாக்கவில்லை: ஜெய்ஸ்-ஏ-முகமது மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

இந்திய நாடாளுமன்றத்தில் நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பானஜெய்ஸ்-ஏ-முகமது கூறியுள்ளது.

சம்பவம் நடந்து ஐந்து நாட்களாகியும் வாயே திறக்காமல் இருந்த இவ்வமைப்பு, தற்போது முதல் முறையாகஅறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்குவதால் எங்களுக்கு ஒரு லாபமும் கிடையாது என்றிருக்கையில், நாங்கள் ஏன்தாக்க வேண்டும் என்றார் அந்தத் தீவிரவாத அமைப்பின் தலைவர் மெளலான மசூத் அஸார்.

இந்தத் தாக்குதலின்போது சுமார் 30 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்துமீட்கப்பட்டு, பின்பு செயலிழக்கப்பட்டன.

ஆனால், இவ்வளவு எடையுள்ள வெடிபொருட்களை அவ்வளவு எளிதாக யாரும் இங்கிருந்து(பாகிஸ்தானிலிருந்து) டெல்லிக்குக் கடத்திக் கொண்டுபோக முடியாது என்றும் மசூத் அஸார் கூறினார்.

தலிபான்களுக்கு ஆதரவாக அமைதியாகப் போராட்டம் நடத்திய உள்ளூர் முஸ்லீம்களையே கைது செய்தபாகிஸ்தான், எதற்கு இந்தியாவைத் தாக்கப் போகிறது என்றும் மசூத் அஸார் கேள்வி எழுப்பினார்.

கடந்த 1999ம் ஆண்டு இந்திய விமானம் காண்டஹாருக்குக் கடத்தப்பட்டபோது, அந்த விமானத்திலிருந்தபயணிகளை மீட்பதற்காக இந்திய அரசால் விடுதலை செய்யப்பட்டவர்தான் மசூத் அஸார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X