நாளை நாடாளுமன்றம் கூடுகிறது - பாதுகாப்பு தீவிரம்
டெல்லி:
மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றம் கூடவுள்ளதையடுத்து,அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து மறுநாள் கூடிய நாடாளுமன்றம், இறந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய பின்னர்ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாகவும் இதுகுறித்துடெல்லி போலீசார் மேற்கொண்டுள்ள புலன் விசாரணை குறித்தும் உள்துறை அமைச்சர் அத்வானி நாளைவிளக்கமளிக்கவுள்ளார்.
மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமான பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்நாடுஇன்னும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாகவும் அத்வானிநாளை கூறவுள்ளார்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு கூடுதலாக பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
விஜய் செளக் பக்கத்திலிருந்து மட்டுமே வாகனங்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும். பத்திரிக்கைநிருபர்கள் 8ம் எண் இரும்பு கேட் வழியாக நுழைந்து, 2ம் எண் கேட் வழியாக வெளியேறலாம்.