தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு பிப்.9ல் இடைத் தேர்தல்
சென்னை:
தமிழகத்தில் தற்போது காலியாக இருக்கும் 3 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதிஇடைத் தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது.
டான்சி வழக்கில் விடுதலை அடைந்ததையடுத்து, ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதாக முன்னாள்முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இத்தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன் ஏற்கனவே தன் பதவியை ராஜினாமாசெய்துவிட்டார்.
சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த வை. பெருமாள் கடந்த ஆகஸ்டு மாதம் மாரடைப்பால் மரணம்அடைந்தார். எனவே இந்தத் தொகுதியும் காலியானது.
கடந்த 17ம் தேதி இந்திய தேசிய லீக் தலைவரும், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவுமான அப்துல் லத்தீப்மாரடைப்பால் இறந்ததையடுத்து, அத்தொகுதியும் காலியாகி விட்டது.
இதையடுத்து, இந்த மூன்று தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் என்றுதெரிகிறது.
இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் தேர்தல் கமிஷனால் வெளியிடப்படவுள்ளது.