பட்டாசு வெடித்து அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்
சென்னை:
நிலக்கரி ஊழல் வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்து தீர்ப்பளித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகதொண்டர்கள் பட்டாசு வெடித்தும், ஸ்வீட் கொடுத்தும் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
ஜெயலலிதாவை உள்ளிட்டோரை நிலக்கரி ஊழல் வழக்கிலிருந்து விடுதலை செய்து இன்று (வியாழக்கிழமை) தனிநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை கேட்டு தனி நீதிமன்றம் முன்பு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில்திளைத்தனர்.
பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.
ஜெயலலிதா நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுக தொண்டர்கள் "புரட்சி தலைவி வாழ்க" என்றுகோஷமிட்டனர்.
இதே போல் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர்களும், அதிமுக தலைமைசெயலகத்தின் முன்பு கூடியிருந்த தொண்டர்களும் பட்டாசு வெடித்து ஜெயலலிதா விடுதலையைக் கொண்டாடினர்.
தமிழகம் முழுவதும் இதேபோல் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications