இந்தியாவின் மருத்துவ சேவைக்கு கர்ஸாய் பாராட்டு
காபூல்:
ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டிருக்கும் மருத்துவ சேவையை அந்நாட்டின் புதிய இடைக்காலப் பிரதமர்ஹமித் கர்ஸாய் பாராட்டியுள்ளார்.
இந்த மருத்துவமனைக்குத் தேவையான டாக்டர்கள், மருந்துகள் உள்பட அனைத்துப் பொருள்களையும்இந்தியாவே வழங்கி வருகிறது.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சைகள்அளிக்கப்பட்டு வருகின்றன என்று கர்ஸாய் பாராட்டியுள்ளார்.
இரண்டு அமைச்சர்களுடன் இந்த மருத்துவமனைக்கு வந்த கர்ஸாய், சுமார் 20 நிமிடங்கள் அதைச் சுற்றிப்பார்த்தார்.
எதிர்காலத்திலும் இங்குள்ள குழந்தைகளுக்குச் சிறப்பான மருத்துவ வசதிகளை இந்தியா செய்யும் என்றும்நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 22ம் தேதியிலிருந்து இதுவரை 6 டன் மருந்துகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.மேலும் 6 டாக்டர்களும் இங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒரு நாளுக்கு சுமார் 300 நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் ஏராளமான மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் இந்தியாவிலிருந்து வரவுள்ளதாகவும் தெரிகிறது.