இந்தியா-பாக். உறவு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாளை விவாதம்
டெல்லி:
தற்போதுள்ள சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் உறவு வைத்துக் கொள்வது பற்றி விவாதிப்பதற்காக பிரதமர்வாஜ்பாய் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்தபிறகு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் இதைநிருபர்களிடம் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங், மார்க்சிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி,இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் அஜாய் சக்கரவர்த்தி, தெலுங்கு தேசம் தலைவர் எர்ரா நாயுடு, சமாஜ்வாடி தலைவர்முலாயம் சிங் யாதவ், பாரதிய சமாஜ்வாடி தலைவர் மாயாவதி ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகமகாஜன் தெரிவித்தார்.
இவர்கள் தவிர அதிமுக தலைவர் பி.எச். பாண்டியன், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங்,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் ஐ.என்.எல்.டி.தலைவர் சுஷில் இந்தோரா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் மகாஜன் கூறினார்.
உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங், நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஷ்ரா ஆகியோரும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.