கிருஷ்ணசாமிக்கு நிபந்தனை ஜாமீன்
வால்பாறை:
வால்பாறை தேயிலை தொழிற்சாலைக்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட இரு வழக்குகளில், புதிய தமிழகம்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு, வால்பாறை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
வால்பாறை அருகே உள்ள தாய்முடி எஸ்டேட் தேயிலை தொழிற்சாலைக்கு தீ வைத்து விடுவதாக மிரட்டியதாககிருஷ்ணசாமி உட்பட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதே போல் இந்த எஸ்டேட் தொழிலாளர்கள் வேலை செய்ய விடாமல் தடுத்ததாக மற்றொரு வழக்கும்தொடரப்பட்டது. இந்த இரு வழக்குகளிலும் முன் ஜாமீன் கோரி கிருஷ்ணசாமி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்திருந்தார்.
அவருக்கு உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. ஆனால் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கிருஷ்ணசாமி வாவ்பாறை நீதிமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) ஆஜரானார். அப்போது தினமும்காலை 10 மணிக்கு கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின்அடிப்படையில் அவரை விடுதலை செய்தார்.












Click it and Unblock the Notifications